செய்திகள் :

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

post image

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் அக்கிராமத்தின் மொத்தமுள்ள 11 வார்டுகளில் 6 வார்டுகளில் பெண்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.3) நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து வெளியான விடியோவில் அந்த 6 பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண் பிரதிநிதிகளுக்கும் பஞ்சாயத்து செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைப்பது பதிவாகியிருந்தது.

இதையும் படிக்க: மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, பண்டாரியா ஜன்பத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளாதாக கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதிவாசிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இல்லையென்றால் இந்த சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நா... மேலும் பார்க்க

அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரின் ராஜிநாமாவை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.4) ஏற்றுக்கொண்டுள்ளார்.மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸைச் (அஜித் பவார்) சேர்ந்... மேலும் பார்க்க

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான ந... மேலும் பார்க்க

காவல் உயர் அதிகாரி வீட்டு வாசலில் 80 வயது முதியவர் கொலை!

ஒடிசாவில் காவல் உயர் அதிகாரி வீட்டின் வாசலின் முன்பு 80 வயது முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நுவாபாடா மாவட்டத்தின் சிர்டோல் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சாஹு (வயது 80) எனும் முதியவர், நேற்று... மேலும் பார்க்க