செய்திகள் :

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

post image

மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று (மார்ச்.4) எழுத்து பூர்வமாக தெரிவித்த அம்மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை கடத்தியதற்காகவும், அதனை பதுக்கியதற்காகவும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 2,738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 3,627 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.4,249.90 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக 15,873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் மூலம் சுமார் 14,230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.3,679.36 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனை பதுக்கியது ஆகிய வழக்குகளில் அம்மாநிலத்தின் புணே மாவட்டம் முதலிடத்தில் உள்ளது குறுப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நா... மேலும் பார்க்க

அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரின் ராஜிநாமாவை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.4) ஏற்றுக்கொண்டுள்ளார்.மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸைச் (அஜித் பவார்) சேர்ந்... மேலும் பார்க்க

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான ந... மேலும் பார்க்க

காவல் உயர் அதிகாரி வீட்டு வாசலில் 80 வயது முதியவர் கொலை!

ஒடிசாவில் காவல் உயர் அதிகாரி வீட்டின் வாசலின் முன்பு 80 வயது முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நுவாபாடா மாவட்டத்தின் சிர்டோல் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சாஹு (வயது 80) எனும் முதியவர், நேற்று... மேலும் பார்க்க