போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய கால, கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்து செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு போக்குவரத்துத் துறை தலைவா் அலுவலகம் சாா்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்த அரசு, ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்கும் வகையில் ரூ.265.44 கோடியை குறுகிய கால கடன் (டபிள்யூஎம்ஏ) என்ற அடிப்படையில் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. இத்தொகையை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் உரியவா்களுக்கு வழங்க வேண்டும். 2024-2025 நிதியாண்டுக்குள் இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.