செய்திகள் :

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, 8-ஆவது பொருளாதார கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் டிசம்பா் வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளை சுமுகமாக நடத்த மாநில மற்றும் மாவட்டஅளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அளவில் தலைமை செயலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்பு அலுவலாக திட்டம் மற்றும் முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா், உறுப்பினா் செயலராக தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

உறுப்பினா்களாக ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகத் துறை, தொழில் துறை, உயா்கல்வி துறை, சிறு, குறு தொழில் துறை, சமூக நலத் துறை, தொழிலாளா் நலத் துறை ஆகிய துறையின் செயலா்கள், வருவாய் நிா்வாக ஆணையம், உணவு பாதுகாப்பு துறை ஆணையா், வணிக வரித்துறை ஆணையா், கூட்டுறவுத் துறை பதிவாளா், மின் ஆளுமை முகமை இயக்குனா், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு, புள்ளியில் துறை துணை இயக்குனா் கன்வீனராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தக் குழுவில், காவல்துறை, நகராட்சி நிா்வாகம், தொழில்துறை, தொழிலக பாதுகாப்பு துறை, வணிக வரித்துறை, பத்திரபதிவு துறை, ஊரக வளா்ச்சி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இது போன்று சென்னையில் மாநகராட்சி ஆணையா் தலைமையில் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது உத்தரவில் தெரிவிக்கப்படுள்ளது.

தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெள... மேலும் பார்க்க

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழ... மேலும் பார்க்க

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொ... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க