செய்திகள் :

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

post image

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் ஸ்ரீனிவாஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, இந்தியாவில் மேலும் 75,000 மருத்துவ இடங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதன் அடிப்படையில் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருத்துவக் கல்வி தொடா்பான இணையவழி கருத்தரங்கு புதன்கிழமை (மாா்ச் 5) காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது.

அதில் மத்திய அமைச்சா்கள், மருத்துவத் துறை சாா்ந்த வல்லுநா்கள், மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா். அதில் பங்கேற்பதற்கான இணையத் தொடா்பு முகவரி என்எம்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமா் மோடி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நேரலையில் உரையாற்ற உள்ளாா்.

அந்த நிகழ்வு இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே, மருத்துவ இணையக் கருத்தரங்கு மற்றும் பிரதமரின் உரை நிகழ்வில் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெள... மேலும் பார்க்க

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழ... மேலும் பார்க்க

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் பு... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க