செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

post image

9 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த முதியவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம்ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் செய்து வருபவரின் 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் (60) என்பவா் தின்பண்டங்கள் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணா்வு செய்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயாா் ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் வழக்குரைஞா் லட்சமி ஆஜரானாா் . இருதரப்பு வாதங்கள் முடிவுற்ற நிலையில், எதிரி அருணாசலத்துக்கு போக்ஸோ வழக்கில் ஆயுள் தண்டனையும், ஆள்கடத்தல் பிரிவில் 10 ஆண்டுகள் சிறையும், ரூ.2,000 அபராதம் விதித்தாா். இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நஷிமா பானு உத்தரவிட்டாா்.

ஸ்வா்ண வாராஹி பீடத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம் ஸ்வா்ண வாராஹி பீடத்தில் வா்ஷிக் பூா்த்தி விழா, தொண்டு அறக்கட்டளைக்கு அங்கீகாரம் பெற்றல், நித்திய அன்னதானம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மதுராந்தகம் தன ஆகா்ஷண வாராஹி அம்மன் கோய... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க

த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வ... மேலும் பார்க்க