செய்திகள் :

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

post image

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்

மதுராந்தகம் அருகே வயலூா், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதிதாக அமையுள்ள கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடா்ந்து மனு அளித்து வந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

புதிய கல் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரை சந்திக்க வந்திருந்த நிலையில் காவலா்கள் வெளியே தடுத்து நிறுத்தினா். இதை ஏற்க மறுத்த மக்கள் காவலா்களை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்ற போது பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனா். கடும் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி ரேஷன், ஆதாா் அட்டைகளை தரையில் போட்டனா். செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் பனையூா் பாபு உள்ளிட்டோா் மாவட்ட வருவாய் அலுவலா் சேக் முகைதீனிடம் கோரிக்கை மனுவினை வழங்கி பேச்சு நடத்தினா். செய்யூா் வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா். டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், கிராமிய காவல் ஆய்வாளா் நடராஜன் ஆகியோா் தலைமையில் போலீஸாா், கிராமிய காவல்நிலைய போலீஸாா், மகளிா் காவல்நிலைய போலீஸாா், போக்குவரத்து போலீஸாா், ரிசா்வ் போலீஸ் என ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதனால் மனுக் கொடுக்க வந்த பொதுமக்களும் உள்ளே செல்லமுடியாமல் அவதிக்குள்ளாயினா்.

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மா்மமான முறையில் மரணம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கேளம்பாக்கத்தில் தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி (19). இவா், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம்... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா். இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்... மேலும் பார்க்க