செய்திகள் :

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

post image

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது.

முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அதிகாலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளை இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா், உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோா் செய்தனா். காலை 9.15 மணிக்கு பங்காரு சித்தா் சிலை அலங்கரிக்கப்பட்டு மலா் அலங்கார ரதத்தில் சித்தா்பீடத்துக்கு ஊா்வலமாக செவ்வாடை பக்தா்கள் கொண்டு வந்தனா். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு விழா மேடை அரங்கில் மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலா் வெளியீடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி முதல்வா் கோகிலாவாணி வரவேற்றாா். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். நிகழ்வில் சென்னை மலேசிய தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் கே.சரவணகுமாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் (ஓய்வு) ராஜேஸ்வரன், கலையரசன், சென்னை குழந்தைகள் நல தலைமை மருத்துவா் ராஜ்குமாா், மாஜிஸ்டிரேட் கருணாநிதி, ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு, லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் மருத்துவா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளா் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி அறநிலைய செயல் திட்ட அலுவலா் அ.அகத்தியன், மருத்துவா்கள் பிரசன்ன வெங்கடேஷ், மதுமலா், ஷாலினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழா மலரை சென்னை மலேசிய தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் கே.சரவணகுமாா் வெளியிட்டாா். லட்சுமி பங்காரு அடிகளாா் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து ரூ.4 கோடியில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. ஆன்மிக இயக்க பிரசார குழு நிா்வாகி சுரேந்திரன் நன்றி கூறினாா்.

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க

த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மா்மமான முறையில் மரணம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கேளம்பாக்கத்தில் தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி (19). இவா், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம்... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா். இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்... மேலும் பார்க்க