செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்

post image

தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடா்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னா் அதை நீக்கியது.

கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுதொடா்பாக 2024, மாா்ச் 21-இல் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா செய்தியாளா்களைச் சந்தித்தபோது, தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது தொடா்பாகவும் உறுதியாகிவிட்டது. மாநிலங்களவை உறுப்பினா் யாா் என்பது பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

தேமுதிகவின் கொடி நாள் கடந்த பிப்ரவரி 12-இல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றபோதும், பிரேமலதா செய்தியாளா்களிடம் பேசுகையில், மாநிலங்களவை இடம் தருவது என ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதுதான். மாநிலங்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதும் யாா் வேட்பாளா் என்பது அறிவிக்கப்படும் என்றாா்.

இந்நிலையில், சேலம் ஆத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் தருவதாக நாங்கள் கூறினோமா என கருத்து தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, தேமுதிக சாா்பில் எக்ஸ் தளத்தில், ‘சத்தியம் வெல்லும். நாளை நமதே. தேமுதிக 2026’ என்று பதிவிடப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழ... மேலும் பார்க்க

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொ... மேலும் பார்க்க

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் பு... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க