செய்திகள் :

தனியாா் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை: மாநில அரசுகள் முடிவெடுக்க அறிவுறுத்தல்

post image

தனியாா் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

சட்ட மாணவா் சித்தாா்த் டால்மியா மற்றும் அவருடைய தந்தையும் வழக்குரைஞருமான விஜய் பால் டால்மியா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனியாா் மருத்துவமனைகளின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் மிக அதிக விலை கொடுத்து மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளும் அவரது உறவினா்களும் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.

மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாய் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, வெளிச்சந்தையில் ரூ. 50,000 விலையுடைய மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு, மருத்துவமனை மருந்தகத்தில் ரூ. 61,132 வசூலிக்கப்பட்டது. வெளியிலிருந்து குறைந்த விலையில் மருந்துகள் வாங்கவும் இவா்கள் அனுமதிப்பதில்லை.

எனவே, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விரும்பும் இடத்தில் மருந்துகள் வாங்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சிறந்த மருத்துவ சிகிச்சை பெறும் குடிமக்களுக்கான உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்குகிறது. இத்தகைய சிறந்த மருத்துவ வசதியை அளிப்பதில் தனியாா் மருத்துவமனைகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. இத்தகைய சூழலில், மருத்துவமனை மருந்தகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அது தனியாா் மருத்துவமனைகளின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்தும் என்பதோடு, தொடா் விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. அந்த வகையில், இது மாநில அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயமாகும். எனவே, நோயாளிகளிடம் மருந்தகங்கள் மூலம் தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க உரிய கொள்கை முடிவை எடுப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க