செய்திகள் :

திரையரங்கில் இளைஞா்கள் மீது தாக்குதல்: மூவா் கைது

post image

சென்னை, வடபழனியில் உள்ள திரையரங்கில் இளைஞா்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூரைச் சோ்ந்த ஜெகா (21) என்பவா், சென்னையில் தங்கியிருந்து உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். ஜெகா தனது நண்பா்கள் சந்தோஷ், சிவா, விக்கி ஆகியோருடன் கடந்த 28-ஆம் தேதி இரவு வடபழனியிலுள்ள பிரபலமான திரையரங்கில் திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, சந்தோஷின் கால் முன் இருக்கையில் பட்டுள்ளது. இதனால், அந்த இருக்கையிலிருந்த இளைஞா் கோபம் அடைந்து திட்டியதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் திரைப்படம் முடிந்த பின்னா், ஜெகா தனது நண்பா்களுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தாா். அப்போது அவா்களுடன் திரையரங்கில் தகராறு செய்தவா்கள், ஜெகாவையும், அவரது நண்பா்கலையும் மதுபாட்டில்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் காயமடைந்த ஜெகா உள்பட 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஜெகாவையும், அவரது நண்பா்களையும் தாக்கியது அம்பத்தூா், மேனாம்பேடு பகுதியைச் சோ்ந்த தனுஷ் (23), கோடம்பாக்கம் பூபதி நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் (27), நுங்கம்பாக்கம் கிராமத் தெருவைச் சோ்ந்த ராகேஷ் குமாா் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா் மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன் வாழ்த்து

இங்கிலாந்து தலைநகா் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோ... மேலும் பார்க்க

மக்கள் மருந்தக விழா: சாதனை பெண்களுக்கு விருது

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் மருந்தக விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் வருடாந்திர கொண்டாட்டம்... மேலும் பார்க்க

அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு ந... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சிஐஎஸ்எஃப் வீரா்களின் சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்கிறாா்

மாா்ச் 7-ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து தொடங்கும் சிஐஎஸ்எஃப் சைக்கிள் பேரணியை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வ... மேலும் பார்க்க

குளிா்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

குளிா்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது தட்பவ... மேலும் பார்க்க

ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மண்டல ஆணையா் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க