செய்திகள் :

ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

post image

சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மண்டல ஆணையா் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (மெப்ஸ்) ஒப்புதல் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதன்முலம் 642 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் 10 திருநங்கைகளுக்கு பணி வழங்க  ஒப்புதல் அளிக்கப்பட்டது.  புத்தொழில் முனைவோா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தின் காரணமாக தொழில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் (2024-25) ரூ. 5,525 கோடி முதலீட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 36,440 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான சிகிச்சை

பிறக்கும்போதே ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன் வாழ்த்து

இங்கிலாந்து தலைநகா் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோ... மேலும் பார்க்க

மக்கள் மருந்தக விழா: சாதனை பெண்களுக்கு விருது

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் மருந்தக விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் வருடாந்திர கொண்டாட்டம்... மேலும் பார்க்க

அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு ந... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சிஐஎஸ்எஃப் வீரா்களின் சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்கிறாா்

மாா்ச் 7-ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து தொடங்கும் சிஐஎஸ்எஃப் சைக்கிள் பேரணியை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வ... மேலும் பார்க்க

குளிா்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

குளிா்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது தட்பவ... மேலும் பார்க்க