செய்திகள் :

சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

post image

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக யாரும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், டிஎம்டிகே ஃபார் டிஎன் (DMDKforTN) என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி,

''கூட்டணி குறித்த பேச்சையெல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் ஏதாவது கூறினோமோ? யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?'' என பதிலளித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | நாமக்கல் துயரம்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்!

நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப... மேலும் பார்க்க

மன்னார்குடி: கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணாமலை நாதர் சன்னதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. செவ்வாய்க்கிழமை இந்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குடிநீர் விநியோக தண்... மேலும் பார்க்க

நாமக்கல்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்ப... மேலும் பார்க்க

நந்தலாலா மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலா, இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையி... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவத... மேலும் பார்க்க

ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!

சூலூர்: கொடுத்த பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கை அகதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நி... மேலும் பார்க்க