செய்திகள் :

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

post image

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் பர்மார் வனவிலங்குகள் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

2023 ஆம் ஆண்டில் 58 மூத்த சிங்கங்கள், 63 சிங்கக் குட்டிகள் உள்பட121 சிங்கங்களும், 2024 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை உயர்ந்து 85 சிங்கங்களும், 80 சிங்கக் குட்டிகளும் சேர்த்து மொத்தமாக 165 சிங்கங்கள் பலியாகின.

இதில், இயற்கையான முறையில் 102 மூத்த சிங்கங்களும் 126 சிங்கக் குட்டிகளும் பலியாகின. ஆனால், இயற்கைக்கு மாறாக 41 சிங்கங்களும் 17 சிங்கக் குட்டிகளும் பலியாகியுள்ளன.

இந்தப் புள்ளிவிவரங்கள் விலங்குகளுக்கான வாழ்வியல் நெருக்கடிகளை அம்பலப்படுத்தியுள்ளன. இதன்மூலம், குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது, அதன் வாழ்விடங்களை மேம்படுத்துவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

சிங்கங்களின் இறப்புகள் பற்றிய அதிர்ச்சிகரத் தகவல்களைத் தொடர்ந்து, குஜராத் அரசு சட்டப்பேரவையில் சிறுத்தைகள் இறப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 225 சிறுத்தைகளும், 2024-ல் 231 சிறுத்தைகளும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில், 154 சிறுத்தைகளும் 71 சிறுத்தைக் குட்டிகளும் 2023 ஆம் ஆண்டு பலியாகின. அதேபோல, 162 சிறுத்தைகளும், 69 சிறுத்தைக் குட்டிகளும் 2024 ஆம் ஆண்டில் பலியாகியுள்ளன.

இந்த எண்ணிக்கையில், இயற்கையான முறையில் 201 சிறுத்தைகளும் 102 சிறுத்தைக் குட்டிகளும் பலியாகின. ஆனால், இயற்கைக்கு மாறாக 115 சிறுத்தைகளும் 38 சிறுத்தைக் குட்டிகளும் பலியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய இரண்டு விலங்கினமும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், குஜராத்தின் வனவிலங்குகள் பாதுகாப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகின்றது.

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க