செய்திகள் :

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

post image

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது.

2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், தற்போது 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

இந்திய சந்தைககளுக்கான உற்பத்தியில் பலவீனமான வளர்ச்சி மற்றும் விற்பனை ஆகியவற்றால் உற்பத்தி கொள்முதலும் குறைந்துள்ளது.

உற்பத்தித் துறை தரவுகளைத் தொகுத்து வழங்கும் எஸ்&பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநரான பிரஞ்சுல் பந்தாரி, பிப்ரவரியில் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் இது 57.7 சதவீதமாக இருந்தது.

இந்திய உற்பத்தித் துறையை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் உலகளாவிய தேவை வலுவாகவே உள்ளது. இது கொள்முதல் நடவடிக்கைகளையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

தொழில் துறை விரிவாக்கமும் வலிமையாக நடந்துவருகிறது. இது கனிசமான உற்பத்தியை இந்த ஆண்டில் உருவாக்கும்.

உற்பத்தியில் நிலவும் பலவினமானபோக்கு 2023 டிசம்பர் மாதத்தில் இருந்தே நீடித்து வருகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிப்ரவரியில் தொழில் துறை நேர்மறையாகவே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க