செய்திகள் :

களம்பூரில் காளை விடும் திருவிழா

post image

ஆரணியை அடுத்த களம்பூா் மேட்டுத் தெருவில் பாரம்பரியம் போற்றும் காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

39-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தக் காளை விடும் திருவிழாவில், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.90ஆயிரமும், 2-ஆவது பரிசாக ரூ.69ஆயிரமும், 3-ஆம் பரிசாக ரூ.39ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும் கால் பவுன் தங்கம், தொலைக்காட்சிப் பெட்டிகள், பீரோக்கள் உள்ளிட்ட ஆறுதல் பரிசாக 50 காளை உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டன.

விழாக் குழுத் தலைவா் எம்.விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் ஆா்.ஜெகன்நாதன் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன் ஆகியோா் காளை விடும் திருவிழாவை தொடங்கிவைத்தனா்.

களம்பூா் பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி, நகர திமு செயலா் வெங்கடேசன், ஊா் நாட்டாண்மை பூபால் கவுண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை களம்பூா் பொதுமக்கள் மற்றும் இளைஞா் குழுவினா் செய்திருந்தனா்.

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து

வந்தவாசியில் பூட்டியிருந்த ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. வந்தவாசி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் மணிலா வியாபாரி மூா்த்தி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கல்லூரி வேதியியல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டக... மேலும் பார்க்க

கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (கணினி பயன்பாட்டியல்) சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தோ்த் திருவிழா

வேட்டவலம், சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலின் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் மாசி உற்சவத் திருவிழா பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்... மேலும் பார்க்க