செய்திகள் :

Cyber Crime: ஓய்வு பெற்ற IFS அதிகாரியிடம் ரூ.6.80 கோடியை ஏமாற்றிய மோசடி கும்பல்... என்ன நடந்தது?

post image

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. சமீபகாலமாக உங்கள் பெயருக்கு வந்திருக்கும் பார்சலில் போதை பொருள்கள் இருப்பதாகக் கூறி சைபர் க்ரைம் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாக சிபிஐ, சுங்கத்துறை அதிகாரிகள், மும்பை போலீஸ் என கூறியும் சைபர் மோசடி நடந்து வருகிறது. அதோடு சமூகவலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தும் இந்த மோசடி நடந்து வருகிறது. இதில் தொழிலதிபர்களும் அரசு அதிகாரிகளும் குறி வைத்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

சோதனையில் சிக்கிய பணம்

அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலராக இருந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரியான கிருஷ்ணகுமார் கௌசல் என்பவரிடமிருந்து 6.80 கோடி ரூபாயை ஒரு கும்பல் மோசடி செய்திருக்கிறது. இதுதொடர்பாக அவர், சென்னை சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்திருக்கிறார்.

அதன்பேரில் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார், ஐ.எஃப்.எஸ் அதிகாரியை ஏமாற்றியவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் கூறுகையில், ``ஐஎஃப்எஸ் அதிகாரியான கிருஷ்ணகுமார் கௌசல் , கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த பணத்தை வைப்புத் தொகையாக வங்கிகளில் வைத்திருந்தார். அதுகுறித்து தகவலறிந்த சைபர் க்ரைம் கும்பல், கிருஷ்ணகுமாரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறது. அப்போது ஆன்லைன் டிரேடிங் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மூலம் கிருஷ்ணகுமாருக்கு ஆசைகளை காண்பித்திருக்கிறது. அதை உண்மையென நம்பிய கிருஷ்ணகுமாரும் அந்த வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செயலியை தன்னுடைய செல்போனில் டவுன்லோடு செய்திருக்கிறார். (SMC apex என்ற செயலியும்,sharada capital என்ற செயலி) அந்த இரண்டு செயலிகள் மூலம் ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட தடவை பணத்தை கிருஷ்ணகுமார் முதலீடு செய்திருக்கிறார்.

cyber crime

அவர் செய்த முதலீடு தொகைக்கு ஏற்ப அதிகளவில் லாபம் கிடைத்தது போன்று அந்த செயலிகளில் பணம் இருப்பதாக காட்டியிருக்கிறது. அதனால், கிருஷ்ணகுமாரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். இந்தச் சூழலில்தான் அந்தப் பணத்தை அவர் எடுக்க முயன்றபோது அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். இந்த வகையில் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டதாக கிருஷ்ணகுமார் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். கிருஷ்ணகுமார் பணம் முதலீடு செய்தது போலி நிறுவனங்கள் என்றும் அந்த நிறுவனங்கள் பெயரில் போலியாக வங்கி கணக்குகளை தொடங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் முதலீடு செய்யப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து அந்தப் பணம் எந்த வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டிருக்கிறது என விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் சைபர் க்ரைம் மோசடி கும்பலை பிடித்துவிடுவோம். அதே நேரத்தில் இதுபோன்ற மோசடி கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல்; நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்!

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலை துறை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்க... மேலும் பார்க்க

SEBI: மீண்டும் சிக்கலில் Ex செபி தலைவர் மாதபி பூரி புச்; `5 பேர் மீது FIR பதிவு' - நீதிமன்றம் அதிரடி

அதானி குழும பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் அப்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரிபுச்-க்கும் தொடர்பு இருக்கிறது என அந்த அறிக்கையில் க... மேலும் பார்க்க

Bank GM `ரூ.122 கோடி' வங்கியில் திருடிய பணத்தை என்ன செய்தார்..? சிக்கிய முக்கிய புள்ளிகள்..!

மும்பையை தலைமையிடமாக கொண்டு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வந்த நியூ இந்தியா கோஆப்ரேடிவ் வங்கியில் ரூ.122 கோடி கையாடல் செய்யப்பட்டு இருப்பதை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் கண்டுபிடித்தது. இதை... மேலும் பார்க்க

Online Scams: கும்பமேளாவையும் விட்டுவைக்காத ஆன்லைன் மோசடி... விடுதி, விமான டிக்கெட் பெயரில் பணமோசடி

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் புனித நீராடவேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். இதற்காக எத்தனையோ சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.... மேலும் பார்க்க

Investment: 1993-ல் ரூ.10,000-க்கு செய்த முதலீடு; இப்போது லட்சங்களில் மதிப்பு! -எப்படித் தெரியுமா?

1993-ம் ஆண்டு ரூ.1,000-க்கு வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் இப்போது எத்தனை லட்சங்களாக உயர்ந்திருக்கும் என்று சும்மா கணக்குப்போட்டு பாருங்களேன்.சென்னையை சேர்ந்தவர் ரவிக்குமார். 1993-ம் ஆண்டு உறவ... மேலும் பார்க்க

Asset Allocation: செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா.. முதலீட்டு உத்திகளை அறிய திருப்பூர் வாங்க..!

செல்வம் சேர்க்க அதனை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதனை அஸெட் அலோகேஷன் (Asset Allocation) என்பார்கள்.பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள்),... மேலும் பார்க்க