செய்திகள் :

`அரிய வகை விலங்கு இது' - கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து இன்ஸ்டாவில் `ரீல்ஸ்' - சிக்கிய இருவர்!

post image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து `அரிய வகை விலங்கு' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து எச்சரித்துள்ளது, வனத்துறை.

வேலூர் மாவட்டம், அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த ரஜினி (45), அரவிந்தன் (28) ஆகியோர் அணில் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி சமைத்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோவாகப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் கீரிப்பிள்ளையை வனப் பகுதியிலிருந்து வேட்டையாடி அதனை அரிய வகை

கீரிப்பிள்ளையை வேட்டையாடிவர்கள்

விலங்கு எனக் கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தனர். ``இது எங்கும் கிடைக்காத வன விலங்கு. இதனை நாங்கள் ஜவ்வாது மலை பகுதியில் அலைந்து தேடி கண்டுபிடித்தோம்" என்று கூறி, வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர்கள், வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

விசாரணையில் அந்த நபர்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களைப் பெற இவ்வாறு செய்ததாகத் தெரிவித்து உள்ளனர். அவர்கள் பதிவிட்ட அந்த வீடியோவிற்கு பத்தாயிரம் லைக்ஸ்களைப் பெற்றதாகவும், மேலும் இன்ஸ்டாகிராமில் பிரபலம் அடைவதற்காக இவ்வாறு வீடியோ பதிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் வன அலுவலர் உத்தரவின் படி அந்த இரண்டு நபர்களுக்கு தலா ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 அபராதம் விதித்து அவர்களை எச்சரித்துள்ளனர் வனத்துறையினர். மேலும் இன்ஸ்டாகிராமில் அந்த நபர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட வேட்டையாடும் வீடியோக்களை நீக்கம் செய்துள்ளனர். 

இது குறித்து பேசிய ஒடுகத்தூர் வனச்சரவு அலுவலர், “வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி வனவிலங்கினை வேட்டையாடுதல் என்பது குற்றமாகும். எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். 

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித... மேலும் பார்க்க

பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..

செங்கல்பட்டு பாலூரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியின் பேருந்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. பாலூரில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள... மேலும் பார்க்க

தேனி: ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி, டூவிலரை அடகு வைத்த நபர் கைது.. என்ன நடந்தது?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜேஸ். இவரின் மனைவி ஜெயலட்சுமி (38) சொந்த பிரச்னை காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்துள்ளார். மனு எழுதுவதற்காக கலெ... மேலும் பார்க்க

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்

வெம்பக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையேயான குடும்ப சண்டையில் மனைவியை கொன்று உடலை தீ வைத்து எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேச... மேலும் பார்க்க

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க

லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்

உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அ... மேலும் பார்க்க