செய்திகள் :

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

post image

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச் பவுண்டேஷனிடமிருந்து சுமார் 7,50,000 பிரிட்டன் பவுண்ட் அளவிலான பணத்தை வென்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதனை, நம்பிய அவர் அவர்களை தொடர்புக்கொண்ட போது ரூ.16,700 பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்புமாறு கூறி ஏமாற்ற முயன்றுள்ளனர்.

இதனால், அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 419, 420 உடன் 511 மற்றும் 120-B மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவுகள் 66A (b) & (c) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக சிபிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஒசின் டேனியல் என்பவரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், இதில் தொடர்புடைய மற்றொரு நபரான அடியா ஒக்கோ என்பவர் தலைமறைவான நிலையில் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடியா ஓக்கோ (எ) ஒடியா ஃபிரான்சிஸ் எஹிஸோஜி குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரை மும்பை விமான நிலையத்தில் பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2015 டிசம்பரில் அடியா ஒக்கோ மற்றும் ஒசின் டேனியல் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட அடியா ஓகோவை புது தில்லியிலுள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தின் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் குற்றவாளியாக அறிவித்தார். மேலும், அவரைப் பிடிக்க அவருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கைகளும் (LOCs) வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முத... மேலும் பார்க்க

மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5... மேலும் பார்க்க

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியி... மேலும் பார்க்க

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமா... மேலும் பார்க்க

28 சிறுமிகள் உள்பட மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

புது தில்லியில் கடந்த 2 மாதங்களில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ரோஹினி நகரத்தில் கடந்த ஜனவரி 1 முதல் பிப்ர... மேலும் பார்க்க