செய்திகள் :

ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்!

post image

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய மாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் மாசிமக பிரம்மோற்சவம் பத்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு மலர் மாலைகள் சூடி காஞ்சிபுர ராஜ வீதியில் காஞ்சி காமாட்சி அம்மன் வலம் வருவது வழக்கம்.

அவ்வகையில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இன்று ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் ஆல் மேல் பல்லக்கில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் பச்சைபட்டுத்தி லக்ஷ்மி தேவி சரஸ்வதி உடன் எழுந்துள்ள நான்கு ராஜ வீதிகளில் மேளதாளம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சி சங்கர மடம் அருகே சிறப்புத் தீபாராதனையில் ஏரளமாணோர் கலந்துகொண்டு பங்கேற்று சாமி தரிசனம் கொண்டார். ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் தீபா ஆராதனை மேற்கொண்டு காமாட்சி அம்மனை வழிபட்டு இறையருள் பெற்றனர். இன்று இரவு மிகவும் புகழ்பெற்ற வெள்ளி ரத நிகழ்வு நடைபெற உள்ளது

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.12-03-2025புதன்கிழமைமேஷம்:இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விர... மேலும் பார்க்க

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த நடவடிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்தது.சுமாா் 15 மாதங்களுக்குப் பிறகு சம்மேளனத்துக்கான அதிகாரம் திருப்பி அளிக்கப்பட... மேலும் பார்க்க

4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்... மேலும் பார்க்க

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஓடிடி: ஜோதிகா

திரைப்பயணத்தில் தான் எதுவும் திட்டமிடவில்லை என நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார். தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.... மேலும் பார்க்க

தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சையைத் தொடர்ந்து தி தில்லி ஃபைல்ஸ்!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ’தி தில்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தினையும் தயாரித்துள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து எடுக்கப்பட்ட தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வ... மேலும் பார்க்க