செய்திகள் :

4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்

post image

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவா், ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், 27-ஆம் இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வெளியேற்றினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 24 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

அல்கராஸுக்கு அடுத்த சவால்: 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ், இப்போட்டியில் தொடா்ந்து 14-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவுடன் அவா் மோதுகிறாா்.

டிமிட்ரோவ் - அல்கராஸ் இத்துடன் 5 முறை சந்தித்திருக்க, அல்கராஸ் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். எனினும், கடைசி இரு சந்திப்புகளில் டிமிட்ரோவே வென்றதும், அவை மாஸ்டா்ஸ் போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் வெற்றி: போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் 7-6 (7/4), 4-6, 7-6 (7/2) என்ற கணக்கில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை 3 மணி நேரம் போராடி தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்திருக்கிறாா்.

முன்னதாக பெருவிரல் காயத்துடன் மான்ஃபில்ஸோடு மோதிய டிமிட்ரோவ், ஹாா்டு கோா்ட் போட்டியில் அவருக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். இருவரும் மோதியது இது 7-ஆவது முறையாக இருக்க, டிமிட்ரோவ் 3-ஆவது வெற்றி கண்டுள்ளாா்.

முன்னாள் சாம்பியன்: போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 4-6, 6-3, 6-1 என்ற செட்களில், 30-ஆம் இடத்திலிருந்த சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 54 நிமிஷங்களில் நிறைவடைந்தது. டபிலோவை 4-ஆவது முறையாக சந்தித்த ஃப்ரிட்ஸ், அனைத்திலும் வென்றிருக்கிறாா். ஃப்ரிட்ஸ் அடுத்த சுற்றில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை சந்திக்கிறாா்.

50-ஆவது வெற்றி: 9-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-0 என, 21-ஆம் இடத்திலிருந்த போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை எளிதாக சாய்த்தாா். இந்த ஆட்டத்தை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் முடித்த மினாா், 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டியில் தனது 50-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

மினாா் - ஹா்காக்ஸ் இத்துடன் 3-ஆவது முறையாக மோதியிருக்க, மினாா் தனது 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா். மினாா் அடுத்த சுற்றில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சந்திக்கிறாா்.

முதல் முறை: போட்டித்தரவரிசையில் 32-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-2, 6-4 என இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் முறியடித்தாா். இந்த வெற்றியின் மூலம், இப்போட்டியில் முதல் முறையாக 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ள நகாஷிமா, அதில் சக அமெரிக்கரான பென் ஷெல்டனுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஷெல்டன் 6-3, 7-5 என, 22-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை சாய்த்து 4-ஆவது சுற்றுக்கு வந்துள்ளாா்.

சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா். அவா் 6-1, 6-2 என்ற நோ் செட்களில் இத்தாலியின் லூசியா புரான்ஸெட்டியை வெளியேற்றினாா். அடுத்த சுற்றில் சபலென்கா, பிரிட்டனின் சோனே காா்டலை சந்திக்கிறாா்.

தோல்வி தந்த அதிா்ஷ்டம்: முன்னதாக சோனே காா்டெல் தகுதிச்சுற்றின் கடைசி கட்டத்தில் அமெரிக்காவின் கிளொ்வி குனுவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா். இந்நிலையில், பிரதான சுற்றிலிருந்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, அந்த வாய்ப்பு காா்டெலுக்கு கிடைத்தது.

அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறிய காா்டெல் 3-ஆவது சுற்றில் 7-5, 6-3 என ரஷியாவின் பாலினா குதா்மிடோவாவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதில் தற்போது உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்காவை அவா் சந்திக்க இருக்கிறாா்.

ஹாட்ரிக்: உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 7-6 (7/1), 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 29-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக முன்னேறியிருக்கிறாா்.

இந்த ஆட்டத்தை 1 மணி நேரம் 35 நிமிஷங்களில் முடித்த கௌஃப், அடுத்த சுற்றில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை எதிா்கொள்கிறாா். முன்னதாக பென்சிச் 6-4, 6-4 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டருக்கு அதிா்ச்சி அளித்து வென்றது குறிப்பிடத்தக்கது.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 3-6, 6-4 என்ற செட்களில், ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தாா். அடுத்து அவா், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை எதிா்கொள்கிறாா்.

24-ஆம் இடத்திலிருக்கும் சாம்சோனோவா 2-6, 6-3, 6-2 என, 12-ஆம் இடத்திலிருந்த சக ரஷியரான டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா். இதனிடையே, 10-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-7 (5/7), 1-6 என, 19-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் டோனா வெகிச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

பாம்ப்ரி வெற்றி

ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி 3-6, 7-6 (7/5), 10-8 என்ற செட்களில், போலந்தின் ஜேன் ஜெலின்ஸ்கி/பெல்ஜியத்தின் சாண்டா் கில்லே கூட்டணியை சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

இளையராஜா பயோபிக் என்ன ஆனது? தனுஷ் பதில்!

இளையராஜா பயோபிக் குறித்து நடிகர் தனுஷ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப... மேலும் பார்க்க

செல்ஃபோனை 100% சார்ஜ் செய்யவே கூடாதா? செய்தால்?

மனிதர்கள் சரியாக சாப்பிடுகிறார்களோ இல்லையோ.. எப்போதும் போனுக்கு சார்ஜ் போட்டு, அதற்கு கவர் போட்டு, மழையில் நனையாமல், கீழே விழுந்தால் பதறித் துடித்து அவ்வளவுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.முதலில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் விளையும் காளான், புற்றுநோய்க்கு மருந்தாகுமா? - புதிய கண்டுபிடிப்பு!

காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப்பொருள். எளிதாகவும் மலிவாகவும் சந்தைகளில் கிடைக்கிறது. காளானில் வைட்டமின் பி, டி, பொட்டாசியம், செலினியம் போன்ற தாதுக்கள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் தமிழ்நாடு அர... மேலும் பார்க்க

கும்பகோணம் சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்!

மாசிமக பிரமோற்சவத்தின் 9ம் நாளான இன்று வைணவ தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்ரபாணிசுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருள ஏராளமான பெண்கள் உள்ப... மேலும் பார்க்க

இலங்கையில் துவங்கியது பராசக்தி படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளது.அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்ப... மேலும் பார்க்க