செய்திகள் :

இளையராஜா பயோபிக் என்ன ஆனது? தனுஷ் பதில்!

post image

இளையராஜா பயோபிக் குறித்து நடிகர் தனுஷ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து, இளையராஜா மற்றும் அருண் மாதேஸ்வரன் அடிக்கடி சந்தித்து படத்தின் உருவாக்கம் குறித்து ஆலோசனை செய்து வந்தனர். இதற்கான, மாதிரி செட் அமைப்பைப் பார்த்த இளையராஜா தன் கருத்துகளையும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: 'இந்தி வாழ்க’ இலங்கையில் பராசக்தி படப்பிடிப்பு!

ஆனால், கடந்த சில மாதங்களாகவே இப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், விசிக எம்பி ரவிக்குமார் தில்லி விமான நிலையத்தில் நடிகர் தனுஷை சந்தித்தது குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இளையராஜா படம் என்ன ஆனது?’ எனக் கேட்டதற்கு, ‘அப்படம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என தனுஷ் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இளையராஜா படம் கைவிடப்படவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க

ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!

சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ... மேலும் பார்க்க

சக்தித் திருமகன் டீசர்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால்,... மேலும் பார்க்க

நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை: கணவர் ரகு விளக்கம்

நடிகை சௌந்தர்யா மரணம் விபத்தல்ல என்றும், திட்டமிட்ட கொலைதான் என்றும் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.நடிகை சௌந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, நட... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் ஸ்நேகிதன் ஒரு ப... மேலும் பார்க்க

அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்..! மெஸ்ஸிக்குப் பிறகு புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் ரபீனியா. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வென்றது.இந்தப் ப... மேலும் பார்க்க