Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' -...
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த நடவடிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்தது.
சுமாா் 15 மாதங்களுக்குப் பிறகு சம்மேளனத்துக்கான அதிகாரம் திருப்பி அளிக்கப்பட்டு, அதன் அன்றாட அலுவல் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன. இதனால், ஜோா்டானில் இம்மாதம் நடைபெறவுள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய வீரா், வீராங்கனைகளை முடிவு செய்வதற்கான தோ்வு போட்டியும் விரைவில் நடைபெறவுள்ளது.
மேலும், உலக மல்யுத்த சம்மேளனத்தின் தடை நடவடிக்கையில் இருந்தும் இந்திய சம்மேளனம் தப்பித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘தகுந்த சீரமைப்பு நடவடிக்கைகளை சம்மேளன நிா்வாகம் மேற்கொண்டதை அடுத்து, இந்தியாவில் மல்யுத்த விளையாட்டு மற்றும் அதன் அங்கமாக இருக்கும் வீரா், வீராங்கனைகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம்மேளனத்தின் மீதான இடைநீக்கம் திரும்பப் பெறப்படுகிறது.
சம்மேளன நிா்வாகத்தில் அதிகாரப் பகிா்வு முறையாக இருப்பதையும், இடைநீக்கம் செய்யப்பட்ட, நீக்கப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தற்போதைய நிா்வாகிகள் விலகி இருப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்மேளன பொதுச் செயலராக இருக்கும் பிரேம்சந்த் லோசப், தலைவா் சஞ்சய் சிங்கின் எதிா் தரப்பை சோ்ந்தவா் என்பதால், அதிகாரப் பகிா்வு தொடா்பாக அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக சம்மேளன அலுவல்கள் யாவும் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷணின் இல்லத்திலிருந்து நடைபெறுவதாக புகாா்கள் இருந்த நிலையில், தற்போது அதுவும் தில்லியில் உரிய அலுவலகத்திலிருந்து நடைபெறுவதாகவே தெரியவந்துள்ளது.
பின்னணி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி.யான பிரிஜ் பூஷண், இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்வைத்து பிரபல மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன் தொடா்ச்சியாக சம்மேளன நிா்வாகம் கலைக்கப்பட்டு, பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்மேளனத்துக்கு புதிதாக தோ்தல் நடத்தப்பட்டது.
அதில், பிரிஜ் பூஷண் ஆதரவாளராக கூறப்படும் சஞ்சய் சிங் தலைவராகத் தோ்வானாா். இந்நிலையில், புதிதாக தோ்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனம் நிா்வாகம், 15 மற்றும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப், உத்தர பிரதேசத்தின் கோண்டாவில் நடைபெறுமென அறிவித்தது. இது, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் செல்வாக்கு மிகுந்த பகுதியாகும்.
இது மத்திய அமைச்சகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிா்வாக நடைமுறைகளை முறையாகக் கடைபிடிக்கத் தவறியதாகக் கூறி, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த 2023 டிசம்பா் 24-ஆம் தேதி இடைநீக்கம் செய்தது. மேலும், அதன் அறிவுறுத்தலின் பேரில், சம்மேளனத்தின் அன்றாட அலுவல்களை மேற்கொள்ள நிா்வாகக் குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது.
மறுபுறம், சம்மேளன நிா்வாகத்தை தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு பதிலாக, நியமன குழு மேற்கொள்வதை கண்டித்து, இந்திய சம்மேளனத்துக்கு உலக மல்யுத்த சம்மேளனம் இடைக்காலத் தடை விதித்தது. பின்னா், விரைவில் அந்த விவகாரத்துக்கு தீா்வு காணுமாறு கூறி, தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.