செய்திகள் :

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஜோமெல் வாரிகன்!

post image

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோமெல் வாரிகன் முதல்முறையாக வென்று அசத்தியுள்ளார்.

கடந்த மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோமெல் வாரிகன் உள்பட மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் நோமன் அலியும் இடம்பெற்றிருந்தார்.

ஜோமெல் வாரிக்கன் (மேற்கிந்தியத் தீவுகள்)

இந்த நிலையில், பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோமெல் வாரிக்கன் 10 விக்கெட்டுகள் மற்றும் 31* ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க.. சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்! -முன்னாள் கேப்டன் நம்பிக்கை

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது போட்டியில் அவர் 54 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

35 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நாடுகளில் மேற்கிந்தியத் தீவுகளை முதல் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு இட்டுச் சென்ற ஜோமெல் வாரிகன் ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் என்ற விருதையும் வென்றுள்ளார்.

32 வயதான ஜோமெல் வாரிக்கன் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவர் ஐசிசி விருதை வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக ஷமர் ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் 2024 இல் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!

21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஓய்வை அறிவித்துள்ளார். 15 வருடங்களாக விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட்டில் இருந... மேலும் பார்க்க

நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் இருந்து இந்திய நடுவர் நிதின் மேனன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்... மேலும் பார்க்க

அசத்திய ஷர்துல் தாக்குர்..! காலிறுதியில் மும்பை வெற்றி!

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. ஹரியாணா, மும்பை அணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை வ... மேலும் பார்க்க

ஆஸி. ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ... மேலும் பார்க்க

கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார். இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. த... மேலும் பார்க்க