செய்திகள் :

கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

post image

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார்.

இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. தற்போது இங்கிலாந்துடன் டி20 தொடரையும் ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது.

கடைசி ஒருநாள் போட்டியில் 44.3 ஓவர்களில் இந்திய அணி 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சதமடித்து அசத்தினார். நம்.5இல் அக்‌ஷர் படேல் களமிறங்கி 41* ரன்கள் எடுத்தார்.

கே.எல்.ராகுலை 5ஆவது இடத்தில் களமிறக்காமல் 6ஆவது 7ஆவது இடங்களில் களமிறக்குவதை சரியான முடிவல்ல என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

தனது சீக்கி சீக்கா யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியதாவது:

ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு நல்ல விஷயம். ஆனால், நான் கே.எல்.ராகுலுக்காக வருத்தப்படுகிறேன். அக்‌ஷர் படேல் நன்றாக விளையாடுகிறார். ஆனால், கே.எல்.ராகுலை மாற்றி களமிறங்குவது நல்லதல்ல. ராகுல் நம்.5இல் சிறப்பாக விளையாடியுள்ளார். அதைத் தவிர்ந்த்து 6,7ஆவது இடங்களில் களமிறக்கும்போது குறைவான ரன்களில் ஆட்டமிழக்கிறார். அது சரியான முடிவல்ல.

டாப் ஆர்டர் பேட்டர்கள் நன்றாக விளையாடுவதால் இப்படி மாற்றினாலும் பிரச்னை இல்லை. ஒருநாள் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்கும்போது கடினமான சூழ்நிலை உருவாகும். அப்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.

நீண்டநாள் செயல்திட்டத்துக்கு இது உதவாது. அதுதான் என்னை கவலை அளிக்கச் செய்கிறது எனக் கூறியுள்ளார்.

21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஓய்வை அறிவித்துள்ளார். 15 வருடங்களாக விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட்டில் இருந... மேலும் பார்க்க

நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் இருந்து இந்திய நடுவர் நிதின் மேனன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்... மேலும் பார்க்க

அசத்திய ஷர்துல் தாக்குர்..! காலிறுதியில் மும்பை வெற்றி!

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. ஹரியாணா, மும்பை அணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை வ... மேலும் பார்க்க

ஆஸி. ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ... மேலும் பார்க்க

உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

கிரிக்கெட் திடலில் இருந்த உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. உலகிலேயே அதிக வருவாய்மிக்க கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின்கீழ் 5... மேலும் பார்க்க