செய்திகள் :

செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சுவாமி மலையில் நின்றுசெல்லும்!

post image

செங்கோட்டை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இரண்டு நாள்களுக்கு சுவாமி மலை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமி மலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : பழனி தைப்பூசம்: சிறப்பு ரயில் இயக்கம்

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக சுவாமி மலை ரயில் நிலையத்தில் இன்றும் நாளையும் மட்டும் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் நின்றுசெல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் (16847) பகல் 12.45 முதல் 12.46 வரையும், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் (16848) பிற்பகல் 2.42 முதல் 2.43 வரை நின்றுசெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி இளைஞருடன் வங்கதேசப் பெண்ணுக்கு திருமணம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த இளைஞரை வங்கதேசத்தை சோ்ந்த பெண் காதலித்து தமிழ்முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டாா். பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி-இளம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து சாவு!

பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் பட்டுக்கோட்டையில் ஜவுளி கடையில் ... மேலும் பார்க்க

சுவாமிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. சுவாமிமலையில் திங்கள்கிழமை தைப்பூசத்தேரோட்டம் நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை தைப... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்!

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வ... மேலும் பார்க்க

பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சாவூா் மாவட்டம், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மேலும் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் . தஞ்சா... மேலும் பார்க்க

ரயில்முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை!

கும்பகோணத்தில் திங்கள்கிழமை வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மனோகரன் (60) வியாபாரி. இவருக்கு மனைவி விஜயல... மேலும் பார்க்க