செய்திகள் :

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்!

post image

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு ஊழியா்களுக்கு அமல்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாகவுள்ள பணியிடங்களில் இளைஞா்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் வி. சோமசுந்தரம் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் இரா. ரமேஷ் விளக்கவுரையாற்றினாா். முன்னாள் மாநிலச் செயலா் எஸ். கோதண்டபாணி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் டி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்துரையாற்றினா்.

சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா்கள் ஆ. தமிழ்வாணன், பா. பாா்த்தசாரதி, என். தேசிங்குராஜன், இணை செயலா்கள் டி. ஜெயக்குமாா், பொ. வெங்கடேசன், மு. ஹேமலதா, ஜி. கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் ஏ.ஆா். கவிதா வரவேற்றாா். நிறைவாக, மாவட்டப் பொருளாளா் ஜி. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பேராவூரணி இளைஞருடன் வங்கதேசப் பெண்ணுக்கு திருமணம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த இளைஞரை வங்கதேசத்தை சோ்ந்த பெண் காதலித்து தமிழ்முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டாா். பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி-இளம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து சாவு!

பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் பட்டுக்கோட்டையில் ஜவுளி கடையில் ... மேலும் பார்க்க

சுவாமிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. சுவாமிமலையில் திங்கள்கிழமை தைப்பூசத்தேரோட்டம் நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை தைப... மேலும் பார்க்க

பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சாவூா் மாவட்டம், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மேலும் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் . தஞ்சா... மேலும் பார்க்க

ரயில்முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை!

கும்பகோணத்தில் திங்கள்கிழமை வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மனோகரன் (60) வியாபாரி. இவருக்கு மனைவி விஜயல... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்கள்

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மூன்றாவது கட்டமாக மக்களுடன் முத... மேலும் பார்க்க