செய்திகள் :

Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா?

post image

Doctor Vikatan: வாய்ப்புண் என்பது வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா... சாதாரண வாய்ப்புண்ணுக்கும் புற்றுநோய் புண்ணுக்குமான வித்தியாசங்களை எப்படிக்  கண்டறிவது... கூர்மையான பற்கள் வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துமா... வாய்ப்புண் வந்தாலே பயமாக உள்ளது. புற்றுநோய் பற்றிய பயம் அதிகமாக உள்ளது, எனக்கு புகை, மதுப் பழக்கங்கள் இல்லை. வாய்ப்புண்ணிலிருந்து மீண்டெழ வழி கூறவும்.

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி  

பல் மருத்துவர் மரியம் சஃபி

வாய்ப்புண் என்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா என்ற பயம், சமீபகாலமாக நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. மவுத் அல்சர் எனப்படும் வாய்ப்புண் ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன. உங்களுக்கு வாய்ப்புண் வருவதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

அதீத ஸ்ட்ரெஸ் இருப்பது, ஹார்மோன்கள் ஏற்ற, இறக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடு, வானிலை மாற்றம் என வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, வாய்ப்புண்கள், 7 நாள்கள் முதல் 2 வாரங்களுக்குள் தாமாக குணமாகிவிடும்.  மருத்துவரை அணுகினால், அவர் வாய்ப்புண்களுக்குத் தடவக்கூடிய க்ரீம் அல்லது ஜெல் பரிந்துரைப்பார். அதை உபயோகித்தாலே புண் சரியாகிவிடும். அதையும் தாண்டி, வாய்ப்புண் தொடர்ந்துகொண்டே இருந்தால், பல் மருத்துவரை அணுகுங்கள்.

பற்களின் கூரிய பகுதி

கூர்மையான பற்கள் குத்திக்குத்தி புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவுதான். ஆனால், பற்களின் கூரிய பகுதியானது, வாயில் உள்ள மென்மையான மியூகோசல் திசுக்களின் (mucosal tissue) மேல் தொடர்ந்து பட்டுக்கொண்டே இருப்பது ஒருவகையான பாதிப்பை உருவாக்கும். உங்களுக்கு ஏற்கெனவே உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். அப்படியிருந்தால், இந்தப் புண்ணானது புற்றுநோய் அல்லாத கட்டியாக மாற வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி வாய்ப்புண் வருகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழ... மேலும் பார்க்க

`நடனமாடி கொண்டிருக்கும்போதே பெண் மரணம்!' - அதிர்ச்சி வீடியோ; மருத்துவர் சொல்வதென்ன?

நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இறந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் பரிணீதா ஜெயின். இவர் எம்.பி.ஏ ... மேலும் பார்க்க

ADMK: `ஜெயலலிதாவை அவமதித்து விட்டார்கள்; செங்கோட்டையன் செய்தது சரிதான்' -டிடிவி தினகரன் சொல்வதென்ன?

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே அ.தி.மு.கவினர் நேற்று (9.2.2025) நடத்தினர். ... மேலும் பார்க்க

ADMK: எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்..? - ஜெயக்குமார் விளக்கம்

அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் இருந்தது தொடர்பாகவும் அதற்கு செங்கோட்டையன் அளித்த வ... மேலும் பார்க்க

Delhi: ``கெஜ்ரிவால் அதை செய்திருக்கணும்; தேர்தல் தோல்விக்கு காரணம் இதுதான்'' - பிரசாந்த் கிஷோர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார்.நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை; நடுரோட்டில் திமுக பிரமுகர் செய்த ரகளை! -வைரலான வீடியோ... கைது செய்த போலீஸ்!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (51). இவர் தி.மு.க-வில் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது கோவிந்தராஜ் அடாவடிகளில் ஈடுபடுவார் என்கிறார்கள். சில வாரங்களுக்கு... மேலும் பார்க்க