செய்திகள் :

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. புகாரளித்த விஜய் மிஸ்ராவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, ராகுலின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா தனது கட்சிக்காரரிடம் நடத்திய குறுக்கு விசாரணை நிறைவடைந்ததாகக் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது, அப்போது சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், டிசம்பர் 2023-இல் அவருக்கு எதிராக ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 2024-இல் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜூலை 26 அன்று தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு ஜாமீன்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதி என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க