செய்திகள் :

Soori: "அன்று சுவர்களில் நிறங்களைப் பதித்தேன்; ஆனால் இன்று திரையில்...” - நெகிழும் நடிகர் சூரி

post image

தமிழ் சினிமாவில் லைட் மேனாக நுழைந்து, பின்னர் திரையில் கூட்டத்தில் ஒருவனாக அவ்வப்போது வந்து, வெண்ணிலா கபடி குழுவால் ரசிகர்கள் மனதில் பதிந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வெள்ளைகாரத்துரை போன்ற படங்கள் மூலம் முழுநேர காமெடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று வெற்றிமாறனின் `விடுதலை' மூலம் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் சூரி.

சூரி
சூரி

அடுத்தடுத்து, கொட்டுக்காளி, கருடன் ஆகிய திரைப்படங்களில் நடிகராக மிளிர்ந்த சூரியின் அடுத்த படமான, இயக்குநர் ராமின் `ஏழு கடல் ஏழு மலை' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான வாசகத்துடன் வீடியோ ஒன்றைச் சூரி பதிவிட்டிருக்கிறார்.

ஒரு கட்டிடத்தில் கயிற்றில் தொங்கியவாறு சுவர்களுக்கு வெள்ளையடிப்பதைப் பக்கத்துக்குக் கட்டிடத்திலிருந்து கண்ணாடி வழியாகச் சூரி பார்க்கும் அந்த வீடியோவுக்கு மேல், ``சுவர்களில் நிறங்களைப் பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்!" என்று சூரி பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Trisha: "என் ட்விட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளது..." - த்ரிஷா விளக்கத்தின் பின்னணி என்ன?

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று (11/02/2025) மாலையில் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனை மீட்கும் வரை பதிவிடப்படும் எதுவும் தான் பதிவிடுவது அல்ல... மேலும் பார்க்க

Vijay: சினுக்கு சினுக்கு சின் சச்சின்..! 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் சச்சின்; எப்போது தெரியுமா?

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டுஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின... மேலும் பார்க்க

Madha Gaja Raja: ``நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது" - S.N. பார்வதி

ஒரு காலத்துல மாசம் முழுக்க நாடகம் இருக்கும். சினிமா வாய்ப்பு கிடைச்சா கூட 'எப்பவாச்சும் கிடைக்கிற வாய்ப்பு'ன்னு அதைப் புறந்தள்ளிட்டு நாடகம் நடிக்கப் போயிருக்கேன். பிறகு சினிமா பக்கம் வந்த பிறகு சிவாஜி... மேலும் பார்க்க

NEEK: ``இதை என்னால் நம்பவே முடியவில்லை; தனுஷ் சார்...' - நெகிழும் அனிகா சுரேந்திரன்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

Karthi: "கைதி-2 வரப்போகுது, அடுத்தது..." - நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்

நடிகர் கார்த்தி இன்று (பிப் 11) குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "ரொம்ப வருஷம் ஆச்சு திருப்பதிக்கு வந்து. என் பையன் பிறந்ததற்குப் ப... மேலும் பார்க்க