செய்திகள் :

டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

post image

அமெரிக்காவில் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்க ஆயர்களுக்கு போப் பிரான்சிஸ் கடிதம் எழுதினார்.

கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, ``பிற நாடுகளில் ஏற்படும் மோதல்கள், வறுமை, பாதுகாப்பின்மை, சுரண்டல், துன்புறுத்தல், காலநிலை பேரழிவுகளிலிருந்து தப்பிப் பிழைத்து, அமெரிக்காவுக்கு வருபவர்களை வரவேற்று, பாதுகாக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

சொந்த நிலத்தைவிட்டு வெளியேறிய மக்களை நாடுகடத்தும் செயல், அவர்களின் கண்ணியத்தைச் பாதிக்கிறது. மற்ற நாடுகளில் குடிபெயர்ந்தோர் பாதுகாக்கப்படுகின்றனர்; ஆனால், அமெரிக்காவை நினைத்தால் கவலையாக உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக பதவியேற்பதற்கு முன்பிலிருந்தே, நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். `புலம்பெயர்வோரைத் தடுக்கும் சுவரை எழுப்புபவர்கள் எவரும் கிறிஸ்தவர் அல்லர்’ என்று போப் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப்பின் ராணுவத்தின் மூலமாக நாடுகடத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிக்க:மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!

பிரிட்டன்: சட்டவிரோதமாகக் குடியேறிய 609 பேர் கைது!

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளநிலையில், பிரிட்டனும் அதற்கேற்றவாறு நாடுகடத்தும் பணியில் தீவிரமாக உள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் ... மேலும் பார்க்க

எஸ்டோனியா அதிபருடன் பிரதமர் சந்திப்பு!

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் செய்யறிவு செயல்திறன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எஸ்டோனியா நாட்டின் அதிபர் அலர் காரிஸுடன் உரையாடினார். இருநாட்டுத் தலைவர்க... மேலும் பார்க்க

மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பட்டை அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவர் உத்தரவிட்... மேலும் பார்க்க

தீவிர வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்!

தீவிர காலநிலை மாற்றத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறுகிறது.தீவிர காலநிலை மாற்றத்தால் நீண்டகால கர்ப்பத்துக்கு பெண்கள் ஆளாவதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெர... மேலும் பார்க்க

செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும்: பிரதமர் மோடி

செய்யறிவு ஏற்கனவே, நமது கொள்கைகள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்று அவர் வலியுறு... மேலும் பார்க்க

லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?

வெளிநாடுகளில் நடக்கும் லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்திவைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.இதன்மூலம், தொழிலதிபர் கெளதம் அதான... மேலும் பார்க்க