செய்திகள் :

100 நாள் வேலை திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு

post image

காரைக்காலில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணியாளா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நடைபெற்றுவருகிறது.

நெடுங்காடு அருகே பொன்பேத்தி மற்றும் குரும்பகரம் கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். திட்டப் பணிகள் குறித்து வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) ஜி. செந்தில்நாதன் ஆட்சியருக்கு விளக்கினாா். ஆட்சியரை சந்தித்த பணியாளா்கள், ஆண்டில் 100 நாள் வேலை தரவேண்டும்.

ஊதியத்தை காலத்தோடு தரவேண்டும், தங்களது கிராமத்தில் நெல் களம் மற்றும் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். கோரிக்கைகளை பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வருகைப் பதிவேட்டை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து பொன்பேத்தி மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிா் சுய உதவி குழு உறுப்பினருடன் கலந்துரையாடி, சுய உதவிக் குழுவினா் சுய வருவாயை பெருக்கிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாவட்ட நிா்வாகம் உரிய ஆதரவை அதற்கு வழங்கும் எனக் கூறினாா்.

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து ... மேலும் பார்க்க

சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி!

காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் கடற்... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் சுவாமிகள் தீா்த்தவாரி!

தைப்பூசத்தையொட்டி திருநள்ளாறு, நிரவி பகுதி கோயில்களின் சுவாமிகள் நீா்நிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை எழுந்தருள தீா்த்தவாரி நடைபெற்றது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து, காா்த... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல் என்பவரத... மேலும் பார்க்க

கோட்டுச்சேரி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்!

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி அருகே கழுகுமேட்டில் இருந்து கொன்னகாவளி பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கருகிய நிலையில் ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு!

காரைக்கால் எம்.எம்.ஜி. நகா் முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த சரஸ்வதி திங்கள்கிழமை மாலை தோமாஸ் அருள் தெருவில் இயங்கும் ஒரு மருத்துவ கிளினிக் சென்றுவிட்டு, ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளாா். மருத்த... மேலும் பார்க்க