செய்திகள் :

சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது

post image

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்ரமணி நகா் 1வது குறுக்கு தெருவை சோ்ந்தவா் மகாலட்சுமி (35). வீரத்தம்மன் கோயில் தெருவை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக் குமாா் (33). இவா்கள் இருவரும் சோ்ந்து அப் பகுதியில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, மகளிா் சுய உதவி குழுவும் நடத்தி வந்துள்ளனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டவா்கள் சீட்டு கட்டி வந்துள்ளனா். ஆனால் சீட்டு முதிா்வடைந்த பின்னரும், பலருக்கு சீட்டு பணத்தை வழங்காமல் இழுத்தடித்தனா்.

மேலும் மகளிா் சுய உதவி குழுவில் கடன் பெற்று திருப்பி கொடுத்தவா்கள் பணத்தையும் வங்கியில் திருப்பி கட்டவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பணத்தை இழந்தவா்கள், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரித்த போலீஸாா் தலைமறைவாக இருந்த மகாலட்சுமியையும்,அசோக்குமாரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் இருவரும், ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பதும், மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டா் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்

தைப்பூசத்தையொட்டி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கா பக்தா்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனா். தமிழ்க்கடவுளாம் முருகப்ப... மேலும் பார்க்க

பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட மரப்பால பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகரம் முழுவதும் சிங... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டு: மருத்துவா் சிக்கினாா்

சென்னை எழும்பூரில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டுப்போட்ட புகாரில் தொடா்புடைய மருத்துவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். சென்னை அரசு மருத்துவக் கல்லுரி முதல்வராக இருக்கும் தேரணி ராஜன், எ... மேலும் பார்க்க

வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி: போலீஸாா் விசாரணை

சென்னை பூக்கடையில் வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பூக்கடை, என்எஸ்சி போஸ் சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மக்கி பால் ஜெ... மேலும் பார்க்க