செய்திகள் :

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

post image

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:

நக்ஸல்கள் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2010-இல் 499 வழக்குகள் பதிவான நிலையில், 2024-இல் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 267-ஆகக் குறைந்துள்ளது. அதுபோல 2010-இல் நக்ஸல்களால் அப்பாவி பொதுமக்கள், படைவீரர்கள் 343 பேர் உயிரிழந்த நிலையில், 2024-இல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆகக் குறைந்துள்ளது. இது 64% குறைவாகும்.

நக்ஸல்கள் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு, பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்காக எஸ்.ஆர்.இ. திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், படைவீரர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குதல், படைவீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தாக்குதல் நடத்துதல், சரணடைந்த நக்ஸல்களின் மறுவாழ்வுக்கு நிவாரணம் அளித்தல், வன்முறையால் உடைமைகளை இழந்த பொதுமக்கள், படைவீரர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுக்கு நிதி வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 2019-20 முதல் இதுவரையிலான கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1925.83 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மட்டும் ரூ.829.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் 43 சதவீதமாகும்.

அத்துடன் நக்ஸல்கள் பாதிப்பு மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் (எஸ்.ஐ.எஸ்.) நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தில் மொத்த ஒதுக்கீடு ரூ.394.31 கோடியில் சத்தீஸ்கர் மாநிலம் ரூ.85.42 கோடி பெற்றுள்ளது. இது 21.6 சதவீதமாகும்.

நக்ஸல்கள் பாதிப்பு உள்ள மாநிலங்களில் சிறப்புப் படைகள், சிறப்பு புலனாய்வுப் பிரிவுகள், மாவட்ட காவல் துறையை வலுப்படுத்த இந்த நிதி செலவிடப்படும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 147 காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 700 காவல் நிலையங்களை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் சத்தீஸ்கரில் 125 காவல் நிலையங்கள் உள்பட 612 காவல் நிலையங்கள் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி நக்ஸல்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் அரசு கட்டடங்கள், சேவை குறைபாடுகளைப் போக்க சிறப்பு மத்திய நிதி (எஸ்.சி.ஏ.) ஒதுக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2019-20 முதல் இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2384.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; அதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ரூ.773.62 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

நக்ஸல்கள் பாதிப்புள்ள மாநிலங்களில் நிர்வாக மேலாண்மைக்காக மத்திய பாதுகாப்புப் படைகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.654. 84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் வாங்கவும், நக்ஸல்கள் பாதிப்பு உள்ள ராணுவ மையங்களில் முக்கிய உள்கட்டமைப்புகளுக்காகவும் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று இதுவரை 46.25 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெள... மேலும் பார்க்க

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க