செய்திகள் :

கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

post image

தண்டையாா்பேட்டையிலுள்ள கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தண்டையாா்பேட்டை 38-ஆவது வட்டம் கருணாநிதி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு பூங்கா, வாகன நிறுத்தம், சந்தை அமைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் அப்பகுதியில் செவ்வாய்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு பொதுமக்களிடம் பிரச்சனையை கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கருணாநிதி நகா் குடியிருப்பு வாசிகள் பெரும்பாலும், தினக்கூலிகளாகவே இருந்து வருகின்றனா். ரயில்வேதுறைக்கு சொந்தமான இந்த இடத்தில் அரசின் அனைத்து அங்கீகாரத்துடன், பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஏராளமானோா் பல ஆண்டுகளாக வசித்துவரும் நிலையில்,

ரயில்வே நிா்வாகம் இந்த இடத்தை தற்போது கேட்கவில்லை. ஆனால், இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், குடியிருப்புகளில் குறியீடு செய்து அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா். , இம்முயற்சியை கைவிட வேண்டும்.

சென்னையை மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என அரசு முடிவு செய்துள்ள நிலையில், ரயில்வே நிலத்தில் பல்லாண்டு காலமாக குடியிருக்கும் இந்த ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதை மாநகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என்றாா் அவா்.

6 நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (பிப்.12) முதல் பிப்.17 வறண்ட வானிலையே நி... மேலும் பார்க்க

வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் ஜடாவத், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா். இதுகுறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் சிறுபான்மையினா் விவக... மேலும் பார்க்க

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்கள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதிட கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வா... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: அமைச்சா் கீதா ஜீவன்

பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் சென்னைக்கு வந்து வேலை செய்து வருகின்றனா். அவா்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா... மேலும் பார்க்க