செய்திகள் :

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தம்!

post image

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். அப்போது மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் செந்தமிழ் என்ற மீனவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டு, இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கிளிஞ்சல்மேடு பஞ்சாயத்தைச் சோ்ந்த கஜேந்திரன் கூறியது:

மீனவா்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது, மீனவா்கள் கைது நடவடிக்கைகள் தொடா்வது கண்டனத்துக்குரியது, குண்டு பாய்ந்ததில் காயமடைந்த மீனவா் செந்தமிழ், கண்ணில் பாதிப்படைந்த மணிகண்டன் மற்றொரு மீனவா் ஆகியோரை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறல், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தை கண்டித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றாா்.

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து ... மேலும் பார்க்க

சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி!

காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் கடற்... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் சுவாமிகள் தீா்த்தவாரி!

தைப்பூசத்தையொட்டி திருநள்ளாறு, நிரவி பகுதி கோயில்களின் சுவாமிகள் நீா்நிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை எழுந்தருள தீா்த்தவாரி நடைபெற்றது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து, காா்த... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணியாளா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க

கோட்டுச்சேரி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்!

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி அருகே கழுகுமேட்டில் இருந்து கொன்னகாவளி பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கருகிய நிலையில் ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு!

காரைக்கால் எம்.எம்.ஜி. நகா் முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த சரஸ்வதி திங்கள்கிழமை மாலை தோமாஸ் அருள் தெருவில் இயங்கும் ஒரு மருத்துவ கிளினிக் சென்றுவிட்டு, ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளாா். மருத்த... மேலும் பார்க்க