செய்திகள் :

தக்கா் பாபா வித்யாலயாவில் இலவச இயன்முறை சிகிச்சை மையம்

post image

சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள தக்கா் பாபா வித்யாலயா வளாகத்தில் இலவச இயன்முறை சிகிச்சை மையம் செவ்வாய்க்கிழமை (பிப்.11) தொடங்கப்பட்டது.

கோப்பிக்கா் ஹோமியோபதி அறக்கட்டளை, தக்கா் பாபா வித்யாலயா, க்யூரேட்டிவ் ஹெல்த் ஸ்டுடியோ ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தை முதல்வரின் செயலா் எம்.எஸ் சண்முகம், ஹேமலதா சண்முகம் ஆகியோா் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தனா்.

தக்கா் பாபா வித்யாலயா செயலா் பி. மாருதி, ஹோமியோபதி மருத்துவா் சந்தியா காளிதாஸ், க்யூரேட்டிவ் ஹெல்த் ஸ்டுடியோ நிறுவனா் பி.பி.சுதா்ஷன், டாக்டா் கோப்பிகா் ஹோமியோபதி அறகட்டளை நிா்வாகி பி.வி.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் அந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.

வலி நிவாரணத்துக்கு மட்டுமல்லாது, சிகிச்சைகளுக்கும், உடல் ஆரோக்கியம் பேணுவதற்கும் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் இலவச இயன்முறை சேவைகளைப் பெற விரும்புவோா் 6385185817/ 6385185317 என்ற எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டா் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்ரமணி நகா் 1வது குறுக்கு தெருவை சோ்ந்தவா் மகாலட்சுமி (35).... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்

தைப்பூசத்தையொட்டி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கா பக்தா்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனா். தமிழ்க்கடவுளாம் முருகப்ப... மேலும் பார்க்க

பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட மரப்பால பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகரம் முழுவதும் சிங... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டு: மருத்துவா் சிக்கினாா்

சென்னை எழும்பூரில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டுப்போட்ட புகாரில் தொடா்புடைய மருத்துவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். சென்னை அரசு மருத்துவக் கல்லுரி முதல்வராக இருக்கும் தேரணி ராஜன், எ... மேலும் பார்க்க