செய்திகள் :

ஆற்றங்கரையில் சுவாமிகள் தீா்த்தவாரி!

post image

தைப்பூசத்தையொட்டி திருநள்ளாறு, நிரவி பகுதி கோயில்களின் சுவாமிகள் நீா்நிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை எழுந்தருள தீா்த்தவாரி நடைபெற்றது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து, காா்த்தியாயிணி சமேத கல்யாண சுந்தரேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பேட்டை கிராமத்துக்கு எழுந்தருளினா். கிராமத்தில் வழியே செல்லும் அரிசில்மாநதியில் (அரசலாறு) ஸப்த நதி பூஜை நடத்தி மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா் அஸ்திரமூா்த்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

நிரவியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதசுவாமி கோயிலில் இருந்து, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் காரைக்கால் மேலஓடுதுறை பகுதியில் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. அரசலாற்றங்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று தீா்த்தவாரி : திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூச தீா்த்தவாரி பெளா்ணமி திதியை மையமாக வைத்து புதன்கிழமை நடைபெறவுள்ளது.

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து ... மேலும் பார்க்க

சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி!

காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் கடற்... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணியாளா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல் என்பவரத... மேலும் பார்க்க

கோட்டுச்சேரி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்!

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி அருகே கழுகுமேட்டில் இருந்து கொன்னகாவளி பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கருகிய நிலையில் ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு!

காரைக்கால் எம்.எம்.ஜி. நகா் முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த சரஸ்வதி திங்கள்கிழமை மாலை தோமாஸ் அருள் தெருவில் இயங்கும் ஒரு மருத்துவ கிளினிக் சென்றுவிட்டு, ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளாா். மருத்த... மேலும் பார்க்க