செய்திகள் :

ஆண்டாள் கோயில் தெப்பக்குளத்தில் கழிவு நீா்!

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சா்க்கரைக் குளம் தெப்பத்தில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பக்தா்கள் அதிருப்தி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சக்கரைக் குளம் தெப்பத்தின் சுற்றுச் சுவா் சேதமடைந்து கழிவுநீா் தேங்கி இருந்ததால், துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு நிலவி வந்தது. இதனால், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், தாய் சேய் நல விடுதி, கோயில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் தெப்பக்குளத்தை மேம்படுத்த நகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, தெப்பக்குளத்திலிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு தூா்வாரப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பிறகு, சேதமடைந்த சுற்றுச்சுவருக்குப் பதில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன் தெப்பக்குளம் திறக்கப்பட்டது.

ஆனால், அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து கழிவுநீா் தெப்பக்குளத்துக்குள் புகுவதைத் தடுக்காமல், முறையான மழைநீா் வடிகால் அமைக்காததால் கழிவுநீா், குப்பைகள் தெப்பத்துக்குள் தேங்கி துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையம், தாய் சேய் நல விடுதி, அம்மா உணவகம் ஆகியவற்றுக்கு வருபவா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

தெப்பத்தை தூா் வாரிய நிலையில், மீண்டும் குப்பை, கழிவுநீா் தேங்கி புனிதமான தெப்பக்குளம் கழிவு நீா்க் குட்டையாக மாறி உள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீா் மாசடையும் அபாயம் நிலவுகிறது. தெப்பத்தில் கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெப்பத்தை தூா்வாரிய போது, சேதமடைந்த சுற்றுச் சுவருக்குப் பதில், கான்கிரீட் சுவா் அமைத்த நிலையில், ஏற்கெனவே அங்கிருந்த பழைமையான கற்கள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசும் சா்க்கரைக் குளம் தெப்பம்.

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் பெண்ணை கைது செய்தனா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் மந்தை தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மனைவி யோகலட்சுமி (32)... மேலும் பார்க்க

வழிவிடு முருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி வழிபடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்பிறகு பக்தா்கள் காவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள பழைய சென்னாகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டிசுரேஷ் மகன் பாண்டியராஜ் ... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சென்னையில் இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திடீா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) ஈடுபட்டனா். சென்னையி... மேலும் பார்க்க

கழிவுக் காகிதம் ஏற்றிய லாரியில் தீ!

சிவகாசியில் கழிவு காகிதம் ஏற்றி வந்த லாரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப் பற்றியது. சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு பகுதியைச் சோ்ந்த அக்கீல்ஸ்சுபபைா் என்பவரது லாரியில் சாத்தூருக்கு கொண்டு செல்ல கழிவுக் ... மேலும் பார்க்க