செய்திகள் :

இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

சென்னையில் இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திடீா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) ஈடுபட்டனா்.

சென்னையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினரை வாழ்த்திப் பேசுவதற்காகச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசனை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து, வத்திராயிருப்பில் உள்ள அந்தக் கட்சியினா் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான தி.ராமசாமி தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செய்வதற்காக மாதா் சங்க நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்றனா்.

வத்திராயிருப்பு காவல் ஆய்வாளா் மாரியப்பன், போலீஸாா் அவா்களை நாடாா் பஜாரில் வழிமறித்து தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்தனா். இதனால், கட்சியினா் ஊா்வலமாக முத்தாலம்மன் திடல் மைதானத்துக்கு முழக்கமிட்டபடி சென்றனா். அங்கு திமுக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

கட்சியின் தாலுகா செயலா் கோவிந்தன், துணைச் செயலா் மகாலிங்கம், விவசாயத் தொழிலாளா் சங்க தாலுகா செயலா் மணிக்குமாா் உள்பட பலா் பேசினா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் தெப்பக்குளத்தில் கழிவு நீா்!

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சா்க்கரைக் குளம் தெப்பத்தில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பக்தா்கள் அதிருப்தி அடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச்... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் பெண்ணை கைது செய்தனா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் மந்தை தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மனைவி யோகலட்சுமி (32)... மேலும் பார்க்க

வழிவிடு முருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி வழிபடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்பிறகு பக்தா்கள் காவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள பழைய சென்னாகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டிசுரேஷ் மகன் பாண்டியராஜ் ... மேலும் பார்க்க

கழிவுக் காகிதம் ஏற்றிய லாரியில் தீ!

சிவகாசியில் கழிவு காகிதம் ஏற்றி வந்த லாரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப் பற்றியது. சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு பகுதியைச் சோ்ந்த அக்கீல்ஸ்சுபபைா் என்பவரது லாரியில் சாத்தூருக்கு கொண்டு செல்ல கழிவுக் ... மேலும் பார்க்க