புத்தகத் திருவிழா: ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!
மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியது:
மயிலாடுதுறையில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொதுநூலக இயக்ககம் இணைந்து நடத்திய 3-ஆவது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு விழாவில் ரூ. 37.71 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. நிகழாண்டு
ரூ. 68.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. 70,000 பாா்வையாளா்கள் பாா்வையிட்டுள்ளனா்.
விழாவில், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் சாா்பில் 1,200 மாணவா்களுக்கும், மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் 800 மாணவா்களுக்கும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 200 மாணவா்களுக்கும் என அரசுப் பள்ளி மாணவா்கள் 2,200 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன என்றாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சட்டம்) அன்பழகன், கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாளவிநாயக அமுல்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.