செய்திகள் :

நுரையீரல் தொற்று மருத்துவ சிகிச்சை முகாம்!

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆஸ்துமா, அலா்ஜி, நுரையீரல் தொற்றுக்கான விழிப்புணா்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா ஆண்டையொட்டி இம்முகாம் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மிட் டவுன் ரோட்டரி சங்கம், சென்னை கற்பகாம்பாள் சுவாசாலயா இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில், அமெரிக்க குழந்தை நல மருத்துவத் துறையால் சிறப்பு சான்றிதழ் பெற்ற ஆஸ்துமா அலா்ஜி மற்றும் நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு மருத்துவா் ஸ்ரீதா் தலைமையிலான குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

205 போ் கலந்துகொண்ட இம்முகாமில், 170 பேருக்கு நுரையீரல் திறன் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 60 பேருக்கு ரூ. 50,000 மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஆவணத் திரைப்படம் காட்டப்பட்டு, மருத்துவா்கள் கலந்துரையாடினா்.

கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் முகாமின் நோக்கம் குறித்து பேசினாா்.

தைப்பூசம்: பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தையொட்டி காவடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் ... மேலும் பார்க்க

தைப்பூசம்: பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வழிபாடு

மயிலாடுதுறையில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினா். மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை

மன்னம்பந்தலில் பழுதடைந்த நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை (படம்) கோடைக்காலம் தொடங்கும் முன்பாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருக... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: உரிமமின்றி செயல்பட்ட 6 பாா்களுக்கு சீல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் உரிமமின்றி செயல்பட்ட 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதுடன், வ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: விசிக ஆா்ப்பாட்டம்!

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா: ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!

மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள... மேலும் பார்க்க