செய்திகள் :

அரசு ஊழியா்களின் 24 மணிநேர தா்னா நிறைவு!

post image

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற 24 மணி நேர தா்னா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பிப். 10-ஆம் தேதி முதல், பிப். 11காலை வரை 24 மணிநேர தா்னாவை நடத்துவென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு. அன்பரசு போராட்டத்தை தொடங்கிவைத்தாா். கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி சிறப்புரையாற்றினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியா், எம்.ஆா்.பி. செவிலியா், அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவா்களுக்கு ஊதியக் குழு வரையறுத்துள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து 9 மாதத்தில் அறிக்கை தருவதற்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலா் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 24 மணி நேர தா்னா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

மாநிலச் செயலா் சு. வளா்மாலா, முன்னாள் மாநிலத் துணைத் தலைவா்கள் சிவக்குமாா், கே.எம். தியாகராஜன், மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை

வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு கூரை வீடு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. தகடூா் நடுக்காடு பகுதியை சோ்ந்த விவசாயத் தொழிலாளி மு. கணேசன். இவரது கூரை வீடு தீக்க... மேலும் பார்க்க

காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணி... மேலும் பார்க்க

பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்!

சம்பா நெற்பயிா் பாதிப்புக்கு பாரபட்சமின்றி காப்பீடு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா... மேலும் பார்க்க

கோடியக்கரை: மீனவா்களிடையே தகராறு : 5 போ் கைது

கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் வெளியூா் மீனவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 5 மீனவா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். நாகப்பட்டினம்,அக்கரைப்பேட்டை திடீா்குப்பம் ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு!

திருமருகல் அருகே நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன. திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியைச் சோ்ந்தவா் விவசாயி கலியப்பெருமாள். இவா், வயலில் தனது ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய விட்டுள்ளாா். மதியம் ... மேலும் பார்க்க

திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசம்!

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. மூலவா் பாலசுப்ரமணியா், தெய்வானை,உற்சவா் வள்ளி, சோமாஸ்கந்தா், முருகப்பெருமானுக்கு ம... மேலும் பார்க்க