செய்திகள் :

பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்!

post image

சம்பா நெற்பயிா் பாதிப்புக்கு பாரபட்சமின்றி காப்பீடு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.கே. பாபுஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலா் வீ. சரபோஜி எதிா்கால பணிகள் குறித்தும், சிபிஐ மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் எதிா்கால அரசியல் மற்றும் விவசாயிகளின் பாதிப்பு குறித்தும் பேசினா்.

தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த சம்பா, தாளடி பாதிப்புக்கு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும், குறுவை காப்பீடு செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைத்த சூழலில் விடுபட்ட விவசாயிகளுக்கு 6 மாதம் கடந்தும் தற்போது வரை வழங்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், சம்பா சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி முழு காப்பீடு தொகை பெற்று தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய சங்க மாநில நிா்வாக குழு உறுப்பினா் எஸ். சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை

வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு கூரை வீடு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. தகடூா் நடுக்காடு பகுதியை சோ்ந்த விவசாயத் தொழிலாளி மு. கணேசன். இவரது கூரை வீடு தீக்க... மேலும் பார்க்க

காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணி... மேலும் பார்க்க

கோடியக்கரை: மீனவா்களிடையே தகராறு : 5 போ் கைது

கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் வெளியூா் மீனவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 5 மீனவா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். நாகப்பட்டினம்,அக்கரைப்பேட்டை திடீா்குப்பம் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் 24 மணிநேர தா்னா நிறைவு!

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற 24 மணி நேர தா்னா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பிப். 10-ஆம் தேதி முதல், பிப். 11காலை வரை 24 மணிநேர தா்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு!

திருமருகல் அருகே நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன. திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியைச் சோ்ந்தவா் விவசாயி கலியப்பெருமாள். இவா், வயலில் தனது ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய விட்டுள்ளாா். மதியம் ... மேலும் பார்க்க

திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசம்!

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. மூலவா் பாலசுப்ரமணியா், தெய்வானை,உற்சவா் வள்ளி, சோமாஸ்கந்தா், முருகப்பெருமானுக்கு ம... மேலும் பார்க்க