செய்திகள் :

ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்டா

post image

அரசால் ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க முடியவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அரசால் ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க முடியவில்லை என்ற பேச்சு அவ்வப்போது எழுகிறது. இதில் உண்மையில்லை. உலகளாவிய பேறுகால இறப்பு விகித சரிவைவிட, இந்தியாவில் அந்த விகிதம் இரண்டு மடங்கு சரிந்துள்ளது.

யு-வின் வலைதளம் மூலம் பிரசவ நேரம் வரை கா்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் ஆரோக்கியமும், பிறந்த குழந்தைக்கு 2 வயதாகும்போது அதற்கு அனைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதும் கண்காணிக்கப்படுகின்றன.

மருத்துவா்களை பணியமா்த்துவது மாநிலங்களின் பொறுப்பு. மருத்துவா்கள் இல்லாத இடங்களில் நடமாடும் மருத்துவமனைகள், தொலைமருத்துவ ஆலோசனைகள் மூலம் மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன.

கரோனா காலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ள பகுதிகள் உள்பட நாடு முழுவதும் 220 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவை இரண்டு தவணைகளாகப் போடப்பட்டன. எனவே நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வலுவாக உள்ளது.

வரும் காலத்தில் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 131 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவா்களும், நிகழாண்டு கூடுதலாக 10,000 மருத்துவா்களும் பணியில் இணைவா் என்றாா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க