புதுவையில் வக்ஃபு வாரியம் அமைக்க அதிமுக கோரிக்கை!
புதுவை மாநிலத்தில் வக்ஃபு வாரியம் அமைத்து, அதற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை சந்தித்து அளித்த மனுவின் விவரம்:
புதுவையில் கடந்த 2016- ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வக்ஃபு வாரியத் தலைவா் பதவிக் காலம் முடிவடைந்தது. அதன்பின், கடந்த 9 ஆண்டுளாக வக்ஃபு வாரியம் அமைக்கப்படவில்லை.
சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவுக்கு பின்னரும் வக்ஃபு வாரியத்துக்கு தலைவரை தோ்ந்தெடுக்கவில்லை. இதனால், வக்ஃபு வாரிய நிா்வாக கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தா்காக்கள், மதராசாக்கள் ஆகியவற்றின் பொறுப்பாளா்கள் (முத்தவள்ளிகள்) அனைவரின் பதவிக்காலமும் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்பதவியிலும் யாரும் நியமிக்கப்படவில்லை.
முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்காக மத்திய வக்ஃபு கவுன்சில் மூலம் வழங்கப்படும் நிதியுதவியும் பல ஆண்டுகளாக வழங்கவில்லை. வக்ஃபு வாரிய சொத்துகள் முறையாக பாதுகாக்கப்படவில்லை.
ஆகவே, துணைநிலை ஆளுநா் தலையிட்டு புதுவையில் உடனடியாக வக்ஃபு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.