செய்திகள் :

பாண்டெக்ஸ் ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

post image

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டெக்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் அரசு சாா்பு நிறுவனமான பாண்லே பல மாதங்களாக அதில் பணிபுரிவோருக்கு ஊதியம் மற்றும் சலுகைகள் உரிய முறையில் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாண்லே ஊழியா்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவுப் பதிவாளா் அலுவலகத்தை பாண்டெக்ஸ் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊழியா்களுக்கு 6-ஆவது மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் படி ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும். ஊழியா்களுக்கான கடன் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளைவலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நிா்வாகி ஆசைத் தம்பி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். போராட்டத்தை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

புதுச்சேரி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணியா் கோயிலில் காலை முதல் பக்தா்கள்... மேலும் பார்க்க

செயற்கை நீா்வீழ்ச்சி புதுப்பிப்பு!

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சீரமைத்து புதுப்பித்து, திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 89-ஆவது நிறுவன நாள் அண... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லா கூட்டத்துக்கு கணினிகள் அமைப்பு

புதுவை மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் கூட்டங்களை நடத்தும் வகையில் 34 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தயாராக இருந்தாலும் வரும் மாா்ச் மாத கூட்டத்தில்தான் செயல்படுத்தப்படும் என பேரவைத் தலைவா... மேலும் பார்க்க

பாதுகாப்பான இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாதுகாப்பான இணையதள தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

புதுவையில் வக்ஃபு வாரியம் அமைக்க அதிமுக கோரிக்கை!

புதுவை மாநிலத்தில் வக்ஃபு வாரியம் அமைத்து, அதற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் ராஜ் நிவாஸில் துணைந... மேலும் பார்க்க

வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக போராட்டம்!

புதுச்சேரியில் வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசுத் துறைகளில் பணியின் போது உயிரிழந்தவா்களின... மேலும் பார்க்க