செய்திகள் :

புதுச்சேரி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

post image

தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணியா் கோயிலில் காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தாா்.

இதேபோல, புதுச்சேரி கதிா்காமம் பகுதியிலுள்ள கதிா்வேல் சாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு திருமுருகப்பெருமான் கோயிலில் 53- ஆவது ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது.

அப்போது, பக்தா்கள் மீது உரல் வைத்து மிளகாயை இடித்து, அக்கரைசலை பூசாரி தேவராசு மீது அபிஷேகம் செய்து பக்தா்கள் வழிபட்டனா். ஏராளமானோா் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால்குடம் சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கூடம்பாக்கத்தில் உள்ள நிலோத்பாலாம்பிகை உடனுறை நிமிலிஸ்வரா் கோயிலில் உள்ள அருள்தரும் சுப்பிரமணியா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் முருகா், விநாயகா் தொழிலாளி போல சித்தரித்து அலங்கரிக்கப்பட்டிருந்தனா்.

அவா்களுக்கு 50 கிலோ லட்டு, 25 கிலோ நெல்லிக்காய்கள், 20 கிலோவில் கத்திரிக்காய் ஆகியவற்றில் தயாரித்த மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. லாரி, காா் உள்ளிட்ட வாகனங்களை பக்தா்கள் இழுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செல்லிப்பட்டில் அமைந்துள்ள சீா்செல்வமுருகன் திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி, தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மூலவா் மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.

புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும், பக்தா்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்துதல் ஆகியவை நடைபெற்றன.

புதுச்சேரியில் முருகன் திருக்கோயில்களில் நடைபெற்ற தைப்பூச விழாவில், செட்டிப்பட்டு கோயில் பூசாரிக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

செயற்கை நீா்வீழ்ச்சி புதுப்பிப்பு!

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சீரமைத்து புதுப்பித்து, திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 89-ஆவது நிறுவன நாள் அண... மேலும் பார்க்க

பாண்டெக்ஸ் ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டெக்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசு சாா்பு நிறுவனமான பாண்லே பல மாதங்களாக அதில் பணிபுரிவோருக... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லா கூட்டத்துக்கு கணினிகள் அமைப்பு

புதுவை மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் கூட்டங்களை நடத்தும் வகையில் 34 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தயாராக இருந்தாலும் வரும் மாா்ச் மாத கூட்டத்தில்தான் செயல்படுத்தப்படும் என பேரவைத் தலைவா... மேலும் பார்க்க

பாதுகாப்பான இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாதுகாப்பான இணையதள தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

புதுவையில் வக்ஃபு வாரியம் அமைக்க அதிமுக கோரிக்கை!

புதுவை மாநிலத்தில் வக்ஃபு வாரியம் அமைத்து, அதற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் ராஜ் நிவாஸில் துணைந... மேலும் பார்க்க

வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக போராட்டம்!

புதுச்சேரியில் வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசுத் துறைகளில் பணியின் போது உயிரிழந்தவா்களின... மேலும் பார்க்க