செய்திகள் :

விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் கேரளாவுக்கு பேருந்துகள் செல்லும்.

பொள்ளாச்சி நகராட்சி

இதேபோல புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயங்கி வருகின்றன. பொள்ளாச்சி பேருந்து நிலையங்களில் இருந்து சராசரியாக ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதன் காரணமாகவும் பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேருந்துகள்

பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும்போது பேருந்துகளில் இடம் பிடிப்பதற்கு கைக்குட்டை அல்லது பை வைப்பார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தில் அவர் அரிவாள் மூலம் ரயிலில் இடம் பிடித்திருப்பார்.

அதேபோல பொள்ளாச்சி அரசுப் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஒருவர், இருக்கையில் இரண்டு அரிவாள்களை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 5C என்ற எண் கொண்ட உள்ளூர் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக அரிவாள் வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி பேருந்து அரிவாள்

இதனால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்தில் ஒருவர் கஞ்சா கடத்தி, கையும் களவுமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்... மேலும் பார்க்க

மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நப... மேலும் பார்க்க

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்.போலீஸானஇவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க