செய்திகள் :

குஜராத் டைட்டன்ஸை வாங்கும் டோரண்ட் குழுமம்!

post image

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.

இதற்கான அனுமதி கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிக பங்குகளை வைத்துள்ள சிவிசி கேபிடல் நிறுவனம் கடிதம் வழங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ அறிமுகம் செய்தது. அப்போது, குஜராத் அணியை சிவிசி கேபிடலும், லக்னெள அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமமும் வாங்கின.

அப்போது, குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க போட்டியிட்ட டோரண்ட் குழுமம், கேபிடல் நிறுவனத்தைவிட குறைவான தொகையை தெரிவித்ததால் ஏலத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிடல் நிறுவனத்திடம் இருந்து குஜராத் அணியை வாங்குவதற்கு டோரண்ட் குழுமம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

ஆனால், ஐபிஎல் அணியை வாங்கும் நிறுவனம் குறைந்தது 3 ஆண்டுகள் அணியின் பங்குகளை விற்க முடியாது என்பதால், குஜராத் அணியை வாங்கும் முயற்சி தடைபட்டிருந்தது.

நேற்றுடன் குஜராத் அணியை கேபிடல் நிறுவனம் வாங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பங்குகளை விற்பதற்கு அனுமதி கோரி பிசிசிஐக்கு கேபிடல் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க : அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!

67 சதவிகித பங்குகளை வாங்கும் டோரண்ட் குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் குஜராத் அணி வரவுள்ளது.

இருப்பினும், 2025 ஐபிஎல் தொடரில் அணியில் எவ்வித மாற்றமும் டோரண்ட் குழுமம் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கேப்டனாக கில்லும், பயிற்சியாளராக நெஹ்ராவும் குறைந்தபட்சம் இந்த சீசனில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமாகி மூன்று ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு முறை கோப்பையும் ஒரு முறை இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அசத்திய ஷர்துல் தாக்குர்..! காலிறுதியில் மும்பை வெற்றி!

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. ஹரியாணா, மும்பை அணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை வ... மேலும் பார்க்க

ஆஸி. ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ... மேலும் பார்க்க

கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார். இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. த... மேலும் பார்க்க

உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

கிரிக்கெட் திடலில் இருந்த உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. உலகிலேயே அதிக வருவாய்மிக்க கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின்கீழ் 5... மேலும் பார்க்க

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை பெத் மூனி!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனையாக பெத் மூனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீராங்கனை வ... மேலும் பார்க்க

லபுஷேனுக்கு தேவை அதிர்ஷ்டம்..! ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை!

ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் ரன்களை குவிக்காமல் இருப்பதும் வெவ்வேறானதென ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை தொடரிலும் மார்னஸ் லபுஷேன் முதல் டெஸ்ட்டில் 20 ரன்கள், ... மேலும் பார்க்க